சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-09-2019 | 6:38 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யவுள்ளதாக தகவல் 02. 4/21 குண்டுத்தாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு 03. ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழுவொன்றின் ஒத்துழைப்பு 04. தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் ஐவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க தீர்மானம் 05. ‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவு 06. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது 07. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக 1300 தபால் மூல விண்ணப்பங்கள் 08. விடைத்தாள் மதிப்பீட்டிற்காக 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளன வௌிநாட்டுச் செய்திகள் 01. தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக மாநில அரசு தெரிவிப்பு 02. சவுதி அரேபியாவின் அரம்கோ (Aramco) பெற்றோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.