தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் ஐவரின் உறுப்புரிமையை நீக்க ஐ.ம.சு.கூ தீர்மானம்

by Staff Writer 14-09-2019 | 4:55 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 5 பேரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள டிலான் பெரேரா, S.B.திசாநாயக்க மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரையே கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் H.M.பௌசி ஆகியோரின் அங்கத்துவத்தை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கான கடிதம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.