பாடசாலைகள் பல மூடப்படுகின்றன

விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பாடசாலைகள் பல மூடப்படுகின்றன

by Staff Writer 14-09-2019 | 3:25 PM
Colombo (News 1st) உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 4 பாடசாலைகள் நாளை (15) முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் ​23 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு ஆனந்தா கல்லூரி, கண்டி வித்தியார்த வித்தியாலயம், மாத்தறை மஹனாமா கல்லூரி மற்றும் குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளன. மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஹிந்து மகளிர் கல்லூரி, வேம்படி உயர் மகளிர் கல்லூரி, வவுனியா சைவ பிரகாசம் மகா வித்தியாலயம், அநுராதபுரம் சென். ஜோசப் கல்லூரி, பதுளை தர்மதூத கல்லூரி, குருணாகல் வடமேல் ரோயல் கல்லூரி ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு D.S.சேனாநாயக்க கல்லூரி, விசாகா வித்தியாலயம், லும்பினி வித்தியாலயம், கம்பஹா யசோதரா தேவி வித்தியாலயம், பண்டாரவத்த பராக்கிரம மகா வித்தியாலயம் மற்றும் களுத்துறை திஸ்ஸ வித்தியாலயம் ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கேகாலை சென்.ஜோசப் கல்லூரி, குளியாப்பிட்டிய சாரநாத் மகா வித்தியாலயம், கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயம், உயர் மகளிர் கல்லூரி மற்றும் மஹானாம கல்லூரி ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளன. மாத்தறை சென்.தோமஸ் உயர் மகளிர் கல்லூரி, இரத்தினப்புரி சீவிலி மத்திய கல்லூரி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மற்றும் சுதர்மா வித்தியாலயம் ஆகியனவும் நாளை முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை பகுதியளவில் மூடப்படவுள்ளன. முழுமையாக மூடப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.