தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது

முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது

by Staff Writer 14-09-2019 | 4:23 PM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோரின் தலைமையில் ஆணைக்குழு கூடவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் நோக்கில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, அனைத்து மாவட்ட செயலாளர்கள், உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் அனைவருக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 10.30-க்கும் ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தௌிவூட்டுவதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதேவேளை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.