புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 18-07-2019 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். 02. யாழ். மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 03. வட மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 04. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சமூக வலைத்தளம் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 05. தமிழ் அரசியல் கைதி ஒருவர் தனக்கு பிணை வழங்குமாறு கோரி புதிய மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 06. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 07. மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை லண்டன் மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர். 02. பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ (Alejandro Toledo) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 03. ஜேர்மனியின் உர்சுலா வொன்டர் லியென் (Ursula Vonder Leyen) ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் தரவரிசைக்காக பிஜியுடன் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

ஏனைய செய்திகள்