ஆப்கான்:விமானத்திலிருந்து வீழ்ந்து இருவர் பலி

ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறுவதற்காக விமான சக்கரங்களில் தொங்கியபடி பயணித்த இருவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு

by Bella Dalima 16-08-2021 | 5:16 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நோக்கில் விமான சக்கரங்களில் தொங்கியபடி பயணித்த இருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். ஈரானின் Tehran Times ஊடகத்தின் ட்விட்டர் தளத்தில் இது தொடர்பான காணொளி வௌியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில், விமானத்தில் ஏற மக்கள் முண்டியடிப்பதும், விமான சக்கரங்களை பற்றிக்கொண்டு பலர் பயணிப்பதும், பறக்கும் விமானத்திலிருந்து ஓரிருவர் கீழே வீழ்வதும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வௌியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்தில் பலர் குவிந்துள்ளனர். நிலைமை கைமீறியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மூவர் உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது.     Read More Here: யுத்த வெற்றியை அறிவித்த தலிபான்கள்: நாட்டை விட்டு வௌியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ள மக்கள்