English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jul, 2021 | 9:10 am
Colombo (News 1st) கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளமூடாக விற்பனை செய்தமை, கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விசேட வைத்தியர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மற்றையவர் குறித்த சிறுமியை வெவ்வேறு நபர்களிடம் அழைத்துச் சென்ற 33 வயதான ஒருவராவார்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் மாலைதீவு பிரஜை ஒருவர், மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், பிரபல வர்த்தகர் ஒருவர், மதகுரு ஒருவர், கப்பல் கெப்டன் மற்றும் கெப்டனின் உதவியாளர் ஒருவர் மற்றும் சிறுமியின் தாய் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
* தொடர்புடைய செய்தி:- பாலியல் தொழிலுக்காக 15 வயது சிறுமி விற்பனை; மேலுமொருவர் கைது
09 Jan, 2022 | 08:35 PM
01 Jul, 2021 | 11:06 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS