.webp)
-557602.jpg)
Colombo (News 1st)தபால் ஊடாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறியளவிலான கடித உறைகள் மற்றும் பொதிகள் மூலமாகவே இந்த போதைப்பொருள் பரிமாற்றம் நடைபெறுவதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் நேரடியாகப் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாக இது இருக்கலாமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
