.webp)
-557315.jpg)
Colombo (News 1st) - நாட்டில் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய ட்ரோன் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முன்னோடி வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
ஒரு ட்ரோனில் 06 பேர் பயணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வேலைத்திட்டம் தற்போது சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு ஆகியன இணைந்து இந்த முன்னோடி திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் செயற்படுத்த மேலும் பல உப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிவில் விமான சேவை போக்குவரத்து அதிகாரசபைகள் இந்த வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு தாய்லாந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக இம்மாத இறுதியில் தாய்லாந்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களின் பின்னர் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.
