.webp)
-557327.jpg)
Colombo (News 1st) - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் முனையத்தில் இன்று (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 06 கிலோ 180 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
