.webp)

Colombo (News 1st) களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி மற்றும் பஸ் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 60 வயதான பெண்ணும் 13 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
