கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு 'கம்பன் புகழ்' விருது

கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு 'கம்பன் புகழ்' விருது

by Chandrasekaram Chandravadani 03-05-2026 | 8:59 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று(03) 'கம்பன் புகழ்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026-இன் இறுதி நாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கம்பன் விழா நிகழ்வுகள் கடந்த 04 நாட்களாக கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் கொழும்பு வௌ்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றன.

இன வேற்றுமையால் பிளவுபட்டிருந்த தேசத்தை ஐக்கியப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பன் கழக பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதனுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை, மலேசியாவின் முன்னாள் அமைச்சர் எம்.சரவணன் ஆகியோர் ஜனாதிபதியை கௌரவித்தனர்.