ரயில்களில் வெப்ப உணர் கருவிகளை பொருத்த நடவடிக்கை

காட்டு யானைகள் ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகுவதை தடுப்பதற்காக ரயில்களில் வெப்ப உணர் கருவிகளை பொருத்த நடவடிக்கை - ரயில்வே திணைக்களம்

by Staff Writer 12-02-2026 | 8:17 AM

Colombo (News 1st) காட்டு யானைகள் ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகுவதை தடுப்பதற்காக ரயில்களில் வெப்ப உணர் கருவிகளை பொருத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றாடல் அமைச்சு  மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றன.

இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணிக்கும் ரயில்களில் வெப்ப உணர் கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர், கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

இது முன்னோடித் திட்டமாக குறிப்பிட்ட காலம் வரை பரிசோதிக்கப்பட்டு அதன் வெற்றியை அடுத்து அந்த மார்க்கத்தில் பயணிக்கும் ஏனைய ரயில் எஞ்சின்களிலும் பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.