.webp)
-607775-552671-552697.jpg)
Colombo (News 1st) நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டொ மற்றும் அவரது மகன் ஜெரம் கெனத் பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று(05) முற்பகல் முன்னிலையாகினார்.
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலலவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, அமரசேகர மாவத்தையில் இயங்கும் நிறுவனமொன்று தொடர்பாக 2015 நவம்பர் மாதத்தில் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
