.webp)

Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை மூடும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலயக்கல்வி பணிப்பாளரின் இணக்கப்பாட்டுடன் தமது பாடசாலையை மூடுவதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழககோன் தெரிவித்தார்.
