.webp)
-496616.jpg)
Colombo (News 1st) நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, நில்தண்டாஹின்ன, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என்பதுடன் வடக்கு, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
