.webp)
-551159.jpg)
Colombo (News 1st) அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட அரச செலவின சட்டமூலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தினூடாக 43 நாட்களாக தொடர்ந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்க நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.
தற்போது 700,000-இற்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் 43 நாட்கள் சம்பளம் இன்றி பணிபுரிகின்றனர்.
அத்துடன் விமான சேவை உள்ளிட்ட பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
