பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 10-11-2025 | 11:48 AM

Colombo (News1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(09) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கு மேல்  மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் இடைக்கிடையே காற்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.