.webp)

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்நீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் கடந்த 09ஆம் திகதி 17 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதவான் 29 மீனவர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
