மத்திய அதிவேக வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக வீதியில் லொரி - பௌசர் மோதி விபத்து ; இருவர் உயிரிழப்பு

by Staff Writer 03-09-2025 | 2:33 PM

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் 41ஆவது கிலோமீட்டர் பகுதியில் லொரி - பௌசர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் லொரியின் சாரதி மற்றும் பௌசர் சாரதியின் உதவியாளருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த லொரி இன்று(03) அதிகாலை பௌசருடன் மோதி 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.