பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்..

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப் நியமனம்

by Staff Writer 26-07-2025 | 4:58 PM

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியை வகித்த கேர்னல் நலின் ​ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிராங்க்ளின் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையணி அதிகாரியான இவர்  தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  அர்ப்பணிப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரியாவார்.