.webp)
Colombo (News 1st) சீதுவ, ராஜபக்ஸ மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு(21) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் தந்தை காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.