போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய பெண் கைது..

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சித்த பெண் கைது

by Staff Writer 19-07-2025 | 4:39 PM

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட குடிவரவு, குடியல்வு திணைக்களத்தின் முத்திரையிடப்பட்ட போலி விசாவும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.