.webp)
Colombo (News 1st)
20 இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ் தீப்பற்றிய சம்பவம் இஸ்ரேலின் கிரியத்மலாகி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒரு இலங்கையர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அவரது நிலைமை பாரதூரமானதல்ல என இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.
பஸ் தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் அதிலிருந்த இலங்கையர் கண்ணாடிகளை உடைத்து வௌியில் குதித்து தப்பியுள்ளனர்.
தங்குமிடத்திலிருந்து தொழில் செய்யும் இடத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே பஸ் தீப்பற்றியுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் கூறினார்.