.webp)
Colombo (News 1st) திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் சேருவில பொலிஸாரால் நேற்று(12) கைது செய்யப்பட்டனர்.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 05 உழவு இயந்திரங்களும் மணலும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நாளை(14) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.