சிரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - 22 பேர் பலி

சிரியா வழிபாட்டுத்தலத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

by Staff Writer 23-06-2025 | 12:02 PM

Colombo (News1st)சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலுள்ள வழிபாட்டுத்தலமொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

வழிபாடுகளின் போது உள்நுழைந்த ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

jihadist அமைப்பை சேர்ந்த ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய செய்திகள்