.webp)
Colombo (News1st) ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் நியாயமானது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஈரான் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை தனது நாடு ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டணி அல்பனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் ஈரானிடம் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டணி அல்பனிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.