.webp)
Colombo (News1st) பதுளை துங்ஹிந்த பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதுளை போக்குவரத்து பிரிவின் பணிப்பாளரின் தலைமையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை(21) துங்ஹிந்த பகுதியில் பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காயமடைந்தனர்.
விபத்துடன் தொடர்புடைய 43 வயதான பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி நாளை(23) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
தம்புத்தேகம பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சுற்றுலா பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியது.
பாதுகாப்பற்ற வகையில் சாரதி பஸ்ஸை செலுத்தியமையே விபத்திற்கு காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.