இலங்கை - பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை - பிரான்ஸ் இடையே கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 17-06-2025 | 2:42 PM

Colombo (News 1st) இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சார்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறுவர்தன மற்றும் பிரான்ஸ் சார்பில் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம், அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவிச் செயலாளரும் திறைசேரி பணிப்பாளர் நாயகமுமான விலியம் ரூஸ் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை - பிரான்ஸ் இடையிலான வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமையினூடாக இயலுமை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.