.webp)
Colombo (News 1st) ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(15) முற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜேர்மனி ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வர்த்தக சபையின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்ததுடன் சுற்றுலாத்துறை பிரதானிகளையும் சந்தித்தார்.
அரசாங்கத்தின் முன்னுரிமை அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜேர்மனி ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.