இஸ்ரேல், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கவனம்

இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசேட கவனம்

by Staff Writer 15-06-2025 | 10:26 AM

இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் நாடு திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2 நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் வான்வௌிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

வான்வௌிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர்  இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

அவசர நிலைமைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கென விசேட இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0112 325 373 மற்றும் 0112 207 200 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வௌிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின் மூலமாகவும் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சு கூறியுள்ளது.