யாழ். மாநகர சபையின் ஆட்சியதிகாரம் ..

யாழ். மாநகர சபையின் ஆட்சியதிகாரம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசம்..

by Chandrasekaram Chandravadani 13-06-2025 | 6:38 PM

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று(13) கைப்பற்றியது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைத்தது.

யாழ் மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று(13) காலை நடைபெற்றது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் மேயர் தெரிவு இடம்பெற்றது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் பெற்றன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இன்றைய மேயர் தெரிவில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் விவேகானந்தராஜா மதிவதனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கனகையா ஸ்ரீ கிருஷ்ணகுமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

மேயர் தெரிவு, பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

இதன்போது 19 வாக்குகளைப் பெற்ற மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தமிழரசு கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்திருந்தது.

யாழ். மாநகர சபையின் துணை முதல்வராக இலங்கை தமிழரசு கட்சியின் இமானுவல் தயாளன் தெரிவாகியுள்ளார்.