மத்திய அதிவேக வீதி தொடர்பான அறிவித்தல்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வரையான இணைப்பு பகுதியின் நிர்மாணப்பணிகள் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

by Staff Writer 12-06-2025 | 11:49 AM

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையான இணைப்பு பகுதியின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பணிகள் அரச நிதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

வீதி மேம்பாட்டு பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் நான்காம் கட்டத்தின் கீழ் குருணாகல் தொடக்கம் தம்புள்ளை வரையான பகுதியை நிர்மாணிப்பதற்காக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள காணி கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.