.webp)
Colombo(News1st) அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(11) அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை எந்தவொரு பிணை நிபந்தனை அடிப்படையிலும் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரய இன்று(11) இரண்டாவது தடவையாகவும் நிராகரித்தார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு போலியான தகவல்களை சமர்ப்பித்து பிரதிவாதியொருவரை வழக்கிலிருந்து விடுவித்தமை தொடர்பில் சந்தேகநபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.