தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

by Staff Writer 09-06-2025 | 10:40 AM

தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வேலைத்திட்டம் இன்று(09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தான பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குளங்கள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்து விசேட உயிர் பாதுகாப்பு பிரிவினர் அடங்கிய குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வேலைத்திட்டம் 24 மணித்தியாலங்களும் நடைமுறைப்படுத்தப்படுமென பதில் பொலிஸ் மாஅதிபர் ப்ரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.

அனுராதபுரம் புனித பூமிக்கு வருகைதரும் பக்தர்களுக்காக 21 வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை புனித பூமியில் 07 வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் தமது வாகனங்களை நிறுத்திவைக்க முடியும் என பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.