ரயிலில் பயணிக்கும் அங்கவீனமானோருக்காக விசேட முறைமை

ரயிலில் பயணிக்கும் அங்கவீனமானோருக்காக விசேட முறைமை அறிமுகம்..

by Staff Writer 08-06-2025 | 11:23 AM

Colombo (News1st)ரயிலில் பயணிக்கும் அங்கவீனமானோருக்காக விசேட முறைமையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அங்கவீமானோர் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் 1971 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இதனூடாக ரயிலில் ஏறியது முதல் பயணம் நிறைவடையும் வரையில் ரயில் பணியாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

இந்த நடைமுறை எதிர்வரும்  15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதுடன்  இது தொடர்பில் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.