.webp)
கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் 2.5 முதல் 3 மீட்டர் வரையில் கடலலை மேலெழக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.