.webp)
Colombo News 1st) தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் இருந்து நீலம் மற்றும் மஞ்சள் நிற Macaw வகை கிளியொன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளி திருடப்பட்டுள்ளமை அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையிலுள்ள கிளிக்கூண்டில் 30 Macaw வகை கிளிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் பராமரிப்பாளர் கூட்டை திறக்க முற்பட்ட போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சோதனை முன்னெடுக்கப்பட்ட போது கூட்டிலிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிற Macaw வகை கிளியொன்று காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போயுள்ள கிளியின் பெறுமதி சுமார் நான்கரை இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.