.webp)
Colombo (News 1st) 35 வருடங்களுக்கு பின்னர் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து வௌி பிரதேசங்களுக்கான ரயில் பொதிகள் சேவை இன்று(08) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Clean Sri Lanka திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் ரயில் நிலைய வாசிகசாலையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.