.webp)
அரச பொசன் நிகழ்வை முன்னிட்டு அனுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் 3,500 பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாவி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் விசேட உயிர் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சிலவற்றை ஈடுபடுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்காக 500-இற்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.