.webp)
Colombo (News 1st) அனுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று(08) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு என தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவரை வெசாக் பூரணை தினத்தன்று விடுதலை செய்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.