.webp)
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று(02) ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்தது.
இதற்கிணங்க ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு 50 வீதம் பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பணிகள் இன்று(02) ஆரம்பமாகவுள்ளன.
தனிப்பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் வழிநடத்தலின் கீழ் ஆட்சியமைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவிற்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர் பட்டியல்கள் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியது.
339 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் 3927 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 14 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியது
ஐக்கிய மக்கள் சக்தியின் 1767 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.