.webp)
Colombo (News 1st) தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அசோக சேபால எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(02) கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு சொந்தமான மாட்டிறைச்சி கடையை குத்தகைக்கு வழங்குவதற்கான விலைமனு கோரலின் போது அதனை அதிகூடிய விலையில் கோரியவருக்கு வழங்காமல் ஆகக்குறைந்த விலையில் கோரியவருக்கு வழங்கியமை தொடர்பில் அசோக சேபால மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனூடாக அரசாங்கத்திற்கு 23,80,000 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.