.webp)
Colombo (News 1st) வவுனியா - ஓமந்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் நேற்று(01) உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பர் ஆகியன ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகின.
இந்த விபத்தில் இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றி வந்த 53 வயதான சச்சிதானந்த குருக்கள் பிரபாகர சர்மா உயிரிழந்துள்ளதுடன் அவருடைய மனைவி, மகன், மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்.வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய 27 வயதான மகன் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.