.webp)
Colombo (News1st)நாட்டில் நிலவிய காற்றுடன் கூடிய மழையினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 50,000 -இற்கும் அதிக மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
அவற்றில் சுமார் 29 வீதமானவை இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட 14,030 இடங்களுக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலேயே அதிகளவான மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மின் தடை தொடர்பான தகவல்களை CEB ASSIT தொலைபேசி செயலியின் ஊடாக அறிவிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.