.webp)
பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதியினால் 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக 25 இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு மதிப்பீட்டின் அடிப்படையிலும் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜீ, தர்மதிலக்க தெரிவித்தார்.
அனர்த்தங்களினால் உயிரிழந்த நபர்களுக்காக 10 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு உடல் அவயங்களை இழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.