தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 29-05-2025 | 4:17 PM

Colombo (News1st) நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் நேற்று(28) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சேர்ப்பு செயற்பாட்டில்  நிலவும் தாமதத்திற்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(30) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.