விபத்தில் 19 வயது இளைஞர்கள் இருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞர்கள் இருவர் பலி

by Staff Writer 26-05-2025 | 4:07 PM

Colombo (News1st) மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் பனிச்சங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த மற்றைய நபர் ஆகிய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.