.webp)
Colombo (News1st) மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிசுசெரிய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுபெத்த நகரில் நேற்று(19) நடத்தப்பட்ட சோதனையில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி ரதலியகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சிசுசெரிய பஸ்ஸில் 16 மாணவர்களும் 2 பெற்றோரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.