.webp)
Colombo (News1st) டெங்கு ஒழிப்பு வாரம் இன்று(19) முதல் ஆரம்பமாகியுள்ளது.
டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுப்புறங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 07 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.